Tuesday, July 17, 2007

எல்லாம் சிவமே! (Ellam Sivame)

அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ
அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
ஒரு குலமும் சுற்றமும் ஓரூரும் நீ


துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்தும் நீ
இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீ
-அப்பர்

தேவாரத்தில் உள்ள இந்த பாடலை,சமிஸ்கிருதத்தில், உள்ள Thvameva maathacha pitha thvameva என்ற பாடலோடும் நாம் ஒப்பிட்டு நோக்கலாம்.

சிவனே, நீரே எனக்கு அம்மாவாகவும், அப்பாவாகவும், அண்ணனாகவும், மனைவியாகவும், மாமனாகவும், மாமியாகவும் உள்ளீர்; நல்ல வழியில் வந்த செல்வமாகவும் (ஒண்பொருள்) நீர் உள்ளீர்;

என் சுற்றமாகவும், கிளையாகவும், ஊராகவும் இருப்பவரும் நீரே. நான், உபயோகிக்கும் பொருளாகவும், நான் பயன்படுத்தும் ஊர்தி வகையாக இருப்பவரும் நீர்.பொன்னாகவும், மணியாகவும், முத்தாகவும் இருப்பவர் நீரே.


எல்லாம் நீரே என்று சொல்லும், அப்பர், இறைவனை என்ன வேண்டுகிறார்? விடையேறும் பெருமானே! துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ - எனக்கு துணை நின்று சுற்றம், ஊர், நுகர்பொருள் போன்றவற்றில் உள்ள பற்றினை முழுமையாகத்துறக்குமாறு அருள் புரிவாயாக!

Thursday, July 05, 2007

First Formal Letter in the World....

Tamil is one of the most ancient languages in the world. (உலகின் ஆறு தொன்மையான மொழிகளில் ஒன்று தமிழ்!.)
It is interesting to know about the first poem/song that had the format of formal letter written these days.

"பிரபஞ்சமே இறைவனின் கவிதை" என்றாலும், இறைவனே ஒரு புலவராய் பாடல் எழுதிய பெருமை உடையது தமிழ் மொழி.


மதுரை கோவிலில், சங்கப் புலவர்கள் 41 பேருக்கு, சன்னிதி உள்ளது. இந்த 41 புலவர்களில், சிவபெருமானும் (இறையனார்) ஒருவர்.



கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடல், பாணபத்திரர் என்னும் ஏழை பாடகருக்கு, பொருள் தரச்சொல்லி, சேர மன்னனுக்கு, சிவபெருமான் எழுதிய கடிதம்.இது 11-ம் திருமுறையை சேர்ந்தது ஆகும்.

இறையனார் அருளிய திருமுகப் பாசுரம்.


மதிமலி புரிசை மாடக்கூடல்

பதிமிசை நிலவு பானிற வரிச்சிறகு

அன்னம் பயில்பொழில் ஆலவாயின்

மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்


பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்கு

உரிமையின் உரிமையின் உதவி யொளிதிகழ்

குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்

செருமா வுகைக்கும் சேரலன் காண்க


பண்பால் யாழ்பயில் பாண பத்திரன்

தன்போல் என்பால் அன்பன்; தன்பாற்

காண்பது கருதிப் போந்தனன்;

மாண்பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே.



We all know that any formal letter starts with From, To and then the subject of the letter.
இங்கும், இந்த பாடலின் முதல் நாலு அடிகள் (From:), சிவபெருமானைக்குறிக்கும்.
அடுத்த நாலு அடிகள் (To:),சேர மன்னனைக் குறிக்கும்.கடைசி நாலு அடிகள் (Subject), கடிதத்தின், நோக்கத்தைச் சொல்கின்றன.
As in any poetry, the beauty of the place goes well described. In the from part, God describes the beauty of Madurai town excellently.

மதி= சந்திரன். சந்திரன் தவழும் மதில்கள் சூழ்ந்த மாடங்களைக்கொண்ட கூடல் நகரில் (மதுரையில்), பால் போன்ற வெள்ளை வரிகளை உடைய சிறகுகள் கொண்ட அன்னப் பறவைகள் நடைபயிலும் பொழில்கள்சூழ்ந்த திருவாலவாயில் (மதுரையில்) நிலைபெற வீற்றிருக்கும் சிவனாகிய நான்,சொல்லும் இச்செய்தியினைப் பருவக்காலத்து மேகம் போலப் பாவலர்க்கு இருபாலும் உரிமையுடனே வேண்டுவன எல்லாவற்றையும் தந்து உதவி, ஒளி விளங்கிய பெரிய பூர்ணசந்திரன் போன்று விளங்கும் வெண்கொற்றக் குடையின்கீழ் அமர்ந்து, போர் வல்ல யானையினைச்செலுத்தும் சேரமன்னனே! காண்பாயாக!

We can see that the Chera king is also well praised as one who gives whatever one seeks... like the cloud that showers good rain!!!

இறுதியில்,சிவன் சொல்லும் செய்தி என்ன?

யாழ் வாசிக்கும் பாணபத்திரன், உன்னைப் போலவே என்னிடத்தில், பக்தி உள்ளவன். அவன், உன்னைக் காண, (இந்த திருமுகப்பாசுரத்தோடு) வருவான். அவனுக்கு பெரும் பொருள் கொடுத்து அனுப்பி வைப்பாயாக!