Sunday, February 14, 2010

திருவாசகம்- திருவம்மானை


பண்சுமந்த பாடல், பரிசு படைத்தருளும்
பெண்சுமந்த பாகத்தான், பெம்மான் பெருந்துறையான்
விண்சுமந்த கீர்த்தி வியன்மண்ட லத்தீசன்
கண்சுமந்த நெற்றி கடவுள் கலிமதுரை
மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு
புண்சுமந்த மேனி பாடுதுங்காண் அம்மானாய்!



பொருள்:

இந்த பாடல், மாணிக்க வாசகரின், வாழ்க்கையில், ந்டந்த நிகழ்ச்சிகளைச் சொல்கிறது.
பண்சுமந்த பாடல், பரிசு படைத்தருளும், பெம்மான் பெருந்துறையான்
: இறைவனைப் பற்றி பாடும், இசைப்பாக்களுக்கு, பரிசு தரும்,திருப்ப்பெருந்துறை ஈசன்.

மாணிக்கவாசகர், இருமுறை, வரகுண பாண்டியரால், தண்டிக்கப்பட்டார். முதல் முறை, அரசன், குதிரை வாங்கக் கொடுத்த பணத்தை, குதிரை வாங்காமல், செலவு செய்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டார். அப்போது, இறைவன், தலையிடவில்லை.

இரண்டாவது முறை, குதிரைகள், நரிகள், ஆனபோது, அந்த குற்றத்தை, மாணிக்க வாசகர் செய்யவில்லை. ஆதலால், அவருக்காக இரங்கி, இறைவன், வந்தார்.

கண்சுமந்த நெற்றி கடவுள் கலிமதுரை,மண்சுமந்து கூலிகொண்டு, அக்கோவால் மொத்துண்டு
புண்சுமந்த மேனி பாடுதுங்காண் அம்மானாய்.

பிட்டுக்கு மண் சுமந்து, வரகுண பாண்டியரிடம், கோலால், மொத்துண்டார்.

இவ்வாறு இறைவன், இரங்கி வரக்காரணம், அவரிடம், உள்ள தாய் உள்ளம். அதற்குக்காரணம், அவர், பெண்சுமந்த பாகத்தானாய், இருப்பதே ஆகும் என்கிறார், மாணிக்க வாசகர்.