Wednesday, December 02, 2009

வேண்டதக்கது அறியோய் நீ !

வேண்டதக்கது அறியோய் நீ ! வேண்ட முழுதும் தருவோய் நீ!
வேண்டும் அயன்மாற்கு அறியோய் நீ! வேண்டி என்னைப் பணி கொண்டாய்!
வேண்டி நீ யாது அருள்செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில், அதுவும் உந்தன் விருப்பன்றே!

திருவாசகம்-குழைத்த பத்தில், உள்ள இப்பாடல், உண்மையான பக்தியுடையோர், இறைவன், எதைத் தந்தாலும், அதை விருப்பத்தோடு, ஏற்றுக்கொள்ளும் தெளிவான மன நிலையைக்கொண்டிருப்பர் என்பதை தெளிவுபடுத்துகிறது

உண்மை பக்தி, இறைவன், சொல்லின்படி நடப்பது. இறைவன், நாம், வேண்டும்,எதையும், முழுதாய், தரும், கருணை வடிவானவர். ஆதலால், வேண்டத்தகாதவற்றை வேண்டினாலும், தருபவர். ஆனால், இறைவனிடத்தில், உண்மை அடியவர், இறைவன், தரும், எதையும், ஏற்றுக்கொள்வர்.

இறைவன், மாணிக்க வாசகருக்கும், மற்ற நாயன்மாருக்கும், துன்பம், தந்த போதும், அவர்கள், பக்தி நிலையில் இருந்து மாறவில்லை.

'இடரினும் தளரினும், எனதுறு நோய் தொடரினும், உனகழல், தொழுதெழுவேன்'- சம்பந்தரின் பதிகம், ஒப்பு நோக்கத் தக்கது.