Saturday, September 05, 2009

அழகிய பிரார்த்தனை

வாயானை மனத்தானை மனத்துள் நின்ற
கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் தன்னைத்
தூயானைத் தூவெள்ளையேற்றான் தன்னைத்
சுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்றன்
தாயானைத் தவமாய தன்மையானைத்
தலையாய தேவாதி தேவர்க்கு என்றும்
சேயானைத் தென்கூடல் திருவாலவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே

-அப்பர் பெருமான் அருளிய பதிகம்.

வாயானை- திரு ஆலவாயானை (மதுரையில் வீற்றிருப்பவரும்)
மனதில் இருப்பவரும், மனதில் எண்ணமாய் இருப்பவரும், அந்த எண்ணத்தை, நிறைவேற்றுபவரும், தூய்மையானவரும், தூய வெள்ளை யானை உடையவரும், என் தாய் போன்றவரும், தவமே உருவானவரும், தேவர்களுக்கு என்றும், சேய்மையானை ( தூரமாய் இருப்பவரும்),ஆகிய திருவாலவாய் ஈசன், திருவடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.


ஒப்பு நோக்க:

புறத்தார்க்கு சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க- மாணிக்க வாசகர்