Sunday, September 18, 2016

பெரியவா ! திருச்சாட்டியக்குடி (திருவிசைப்பா -ஒன்பதாம் திருமுறை )

பெரியவா ! கருணை இளநிலா வெறிக்கும்
   பிறைதவழ் சடைமொழுப் பவிழ்ந்து
சரியுமா சுழியம் குழைமிளிர்ந் திருபால்
   தாழ்ந்தவா காதுகள் ! கண்டம்
கரியவா ! தாமும் செய்யவாய் முறுவல்
   காட்டுமா ! சாட்டியக் குடியார்
இருகைகூம் பினகண் டலர்ந்தவா முகம் ! ஏழ்
   இருக்கையில் இருந்தஈ சனுக்கே.        

இந்த பதிவில் நாம் பார்க்க போவது ஒன்பதாம் திருமுறையில் உள்ள திருவிசைப்பா பாடல். இது ராஜராஜசோழரின் குருவான கருவூர் தேவர் அருளியது.நேராக வாசித்தால் எளிதில் கருவூர் தேவரின் பாடல்களின் பொருள் புரியவில்லை.வார்த்தைகளில் வித விதமான கோர்வை நயம்

பாடலின் பொருள் தம்மை நோக்கி கைக்கூப்பிய   திருச்சாட்டியக்குடி மக்களைப்பார்த்து இறைவன் முறுவலித்தார் என்பதே.
திருச்சாட்டியக்குடி திருத்துறைப்பூண்டிக்கு  அருகில் இருக்கிறது.
எனக்கு இந்த பாடலின் முதல் சொல்லைப்பார்த்ததும் காஞ்சி பெரியவரின் நினைவு வந்தது. நம் தாய்தந்தையர் பலரும் தரிசனம் செய்த மகான் காஞ்சி பெரியவர்.


ஏழ்   இருக்கையில் இருந்த ஈசனுக்கே: ஏழு நிலைகள்   உடைய திருச்சாட்டியக்குடி கோயிலில் வீற்றிருக்கும் ஈசனுக்கு
கருணை பெரியவா :கருணை ஒன்று, அதனால் விளையும் பயன்கள் பல. அதனால் சொல் எச்சமாக கருணை பெரியவா என்றார் கருவூர் தேவர்.


இளநிலா வெறிக்கும்
   பிறைதவழ் சடைமொழுப் பவிழ்ந்து
சரியுமா சுழியம் குழைமிளிர்ந் திருபால்    தாழ்ந்தவா காதுகள்: 


மொழுப்பு-முடி.   சுழி  அம்  குழை-வளைந்த  அழகிய    குண்டலம்.


இறைவனின் தலையில் தவழும் பிறையால் ஒரு சிறு ஒளி தவழ்கிறது.சடையில் உள்ள முடிகள் அவிழ்ந்து சரிந்து இருக்கின்றன. காதுகளில் வளைந்த அழகிய குண்டலங்கள் தாழ்வாக தொங்குகின்றன.
கண்டம்
கரியவா: தொண்டையில் ஆலகால விஷத்தை அடக்கி உயிர்களைக்காத்ததால் கண்டம் கருத்தவர்.

சாட்டியக் குடியார்
இருகைகூம் பினகண் டலர்ந்தவா முகம் தாமும் செய்யவாய் முறுவல்
   காட்டுமா:திருச்சாட்டியக்குடி மக்கள் தன் கைக்கூப்பி தொழுதலைக்கண்டு,முகம் மலர்ந்து, இறைவனும் முறுவல் பூத்தார்.


3 comments:

Nagendra Bharathi said...

அருமை

manvizhi said...

Vazgha valamudan Rombba romba arumai😃😃😃😃

manvizhi said...

Vazgha valamudan Rombba romba arumai😃😃😃😃