Wednesday, January 26, 2022

எளிதாய்க்கற்கலாம் திருமுறை புத்தகம் வெளியீடு

 திருமுறை ஆர்வலர்களுக்கு,

அன்பும் பணிவும் கலந்த வணக்கம். என்னுடைய முதல் நூல் எளிதாய்க்கற்கலாம் திருமுறை வெளியீடு கண்டுள்ளது.

தீநுண்மி சூழலில், எங்களால் விழா எடுக்க முடியாவிட்டாலும், சிங்கப்பூரில் உள்ள தமிழ் சான்றோர்கள், திரு.சுப.திண்ணப்பன் மற்றும், திரு.அ.கி.வரதராசன் அவர்களிடமும் வாழ்த்துப்பெற்றோம்.

ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய ஓதுவார் திரு.சுந்தரமூர்த்தி அவர்களிடமும், எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கர் அவர்கள் முன்னிலையில் ஆசி பெற்றோம்.




சிங்கப்பூரில் உள்ள ஓதுவாமூர்த்திகள் பலரும், இந்நூல் பல புதிய பாடல்களைக்கொண்டு அமைந்துள்ளதாக பாராட்டுதெரிவிக்கின்றனர்.



தமிழிலும், ஆங்கிலத்திலும் தொடர்ந்து இருபத்தைந்து ஆண்டுகளாக முத்திரை பதித்துள்ள எழுத்தாளர் ,திருமதி ஜெயந்தி சங்கர் அவர்கள் முகநூலில் பகிர்ந்த மதிப்புரை இதோ.



நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளர் திரு.நாஞ்சில் நாடன் அவர்களும் இந்நூலுக்காக மதிப்புரை ஒன்றை வழங்கியுள்ளார்.

அதில் தமிழ் இலக்கிய சுவைக்காகவும் இந்நூல் நல்ல வாசிப்பு அனுபவம் என்ற தன் கருத்தைப்பதிந்துள்ளார் 






இந்நூலை வாங்க விருப்பமுள்ளவர்கள், இந்தியாவில் ,கீழ்க்கண்ட முகவரியைத்தொடர்புகொள்ள வேண்டுகிறேன்.

https://www.aganazhigai.com/shop/Elithai_Karkalam_Thirumurai/

சிங்கப்பூர் அல்லது மற்ற நாடுகளில் இருப்போர் என்னைத்தொடர்பு கொள்ளலாம். (Fb profile: Vidhya Krish) 

அன்புடன்

வித்யா அருண் 


No comments: